இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகம் முன்பு 74 ஆவது குடியரசு தின கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனர்
இந்நிகழ்விற்கு நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் குடியரசு தின தேசிய கொடியினை ஏற்றி வைத்து குடியரசு அமைப்பு தின உறுதிமொழி வாசித்தார்
மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஹ்மத்து நிஷா நல்லுசாமி பெருமாள் ராஜேந்திரன் நகரத் துணைச் செயலாளர் மரியராஜ் செல்லமுத்து ஜெயலட்சுமி செல்வி மாரிமுத்து அருணகிரி சின்ன கண்ணு தங்கவேல் மாசி மலை சந்தனகுமார் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்