புகையிலைப் பொருள்கள் விற்பனை – ஸ்ரீரங்கம் நாகநாதர் டீ கடைக்கு சீல்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது முறை அபராதம் விதித்தும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்த தேனீர் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது நாகநாதர் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.