திருச்சி கோர்ட்டு வளாகத்தில் சஞ்சிப் பானர்ஜி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி. இவர், திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவரை, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் சஞ்சிப் பானர்ஜி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டோன் பிளிஸ்டு தாகூர் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.