புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் இரண்டு முறை இரண்டு கடைகளுக்கும் அபராதம் விதித்தனர். மேலும் இரண்டு கடைகளிலும் தொடர்ந்து புகையிலை
பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.