“ஆடி பட்டம் தேடி விதை” – திருச்சியில் பாரம்பரிய விதைகள் கண்காட்சி!
“ஆடி பட்டம் தேடி விதை” – பாரம்பரிய விதைகள் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய நெல் விதைகள், காய்கறிகள் மற்றும் மர விதைகள் காட்சிப்படுத்தப்படுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விதைகளை விற்பனை செய்துவரும் விற்பனையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் பாரம்பரியமிக்க முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விதைகள் என அனைத்தையும் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர் இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo