திருச்சியில் உணவு வணிகர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் உணவு வணிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இது 112 உணவு வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த தடுப்பூசி போடும் நிகழ்வும், 11 உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் கொடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உணவுத்துறை மாவட்ட நியமன தலைவர் ரமேஷ்பாபு தலைமை ஏற்று தொடங்கிவைத்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பேக்கரி உரிமையாளர் சங்கத்தில் மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கமால், பொருளாளர் அருண் பாலாஜி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்