ஸ்ரீரங்கம் மாசி தெப்பத் திருவிழா நிறைவு
ஸ்ரீரங்கம் மாசி தெப்பத் திருவிழா நம்பெருமாள் பந்தக் காட்சியுடன் நிறைவு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடத் திருவிழா எனப்படும் மாசி தெப்பத் திருவிழா 9ம் நாளான இன்று (10.03.2025) இரவு, நம்பெருமாள், ஒற்றை பிரபை வாகனத்தில், 100க்கணக்கான தீப்பந்தங்கள் புடை சூழ நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இந்த பந்தக்காட்சி சேவையுடன் திருப்பள்ளி ஓடத் திருவிழா இனிதே நிறைவடைந்தது.