மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், திருச்சிமாநகராட்சி ஆணையர் பி.எம்.என். முஜிபுர் ரகுமான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
