பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்ச மெயய்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.