லஞ்சம் பெற்றதாக புகார் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு விசாரணை மேற்கொண்டு தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேலை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.