சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான தியாகி அருணாச்சலத்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், திருச்சி வேலுச்சாமி, மாநில துணைத் தலைவர் சுஜாதா, மாநில பொதுச்செயலாளர் முரளி, மாநில மகளிர் அணி செயலாளர் ஹேமா, மாவட்ட துணைத்தலைவர்கள் திருக்குறள், முருகானந்தம், நிஜவீரப்பா வில்ஸ், முத்துக்குமார், மா.முருகேசன், புத்தூர் சார்லஸ், வக்கீல் சந்திரன், ட ரெக்ஸ், ஸ்ரீரங்கம் கதிரேசன், ஜவகர், ஆறுமுகம், அழகு மணியன், வக்கீல் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.