திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம்
திருச்சி, மே 6 திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா , துணை ஆணையர் க. பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.