திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
திருச்சி, மே 30 திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் , துணை மேயர் ஜி.திவ்யா,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.