திருச்சி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது!
திருச்சி ஆலம்பாடிமேட்டூர் கொள்ளிடக்கரை பகுதியில் கல்லக்குடி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.