திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் துவங்கியது.நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் .நேரு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் எம்எல்ஏக்கள்,வருவாய்த்துறை ஊரக, வளர்ச்சித்துறை, நகராட்சி துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள பங்கேற்றுள்ளனர்.