திருச்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம், ஜோசப் கல்லூரி மைதானத்தில் குடிநீர் உந்துகுழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால், நாளை (11.5.2021) பெரியகடைவீதி, பாபுரோடு, கீழப்புலிவார் ரோடு, கள்ளத்தெரு, மேலரண்சாலை, மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளி வாசல் தெரு, சிங்காரத்தோப்பு, தாராநல்லூர், ராணி தெரு, பெரிய சவுராஷ்;டிரா தெரு, சுண்ணாம்புகார தெரு, கம்மாள தெரு, அலங்கநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.