பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக பாலக்கரை ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.