மாந்துறையில் நாற்றங்கால் பண்ணையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், மாந்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின்குமார், ஊராட்சித் தலைவர் தர்மன்ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் சங்கர் இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் சுதர்சன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவர் சுந்தரி கலைவாணண் ஆகியோர் உள்ளனர்.