முதலமைச்சர் நிவாரண நிதி – குடிநீர்வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ரூ.5 இலட்சம் வழங்கல்
முதல்வரின் வாரண நிதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி மாவட்ட ஒப்பந்தக்காரர்கள் நல சங்கத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர். உடன் திருச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வீரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்எல்ஏ மாநகரச் செயலாளர் அன்பழகன் முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,சங்க தலைவர் சின்னத்துரை செயலாளர் ஆனந்தன் பொருளாளர் செந்தில்குமார் துணைத்தலைவர் வெற்றிவேல் மற்றும் தொமுச மாநில கௌரவத் தலைவர் தெய்வீகன் சௌந்தரபாண்டியன் ராஜகோபால் உட்பட பலர் உள்ளனர்.