திருச்சி, கே.கே.நகர், ஐயப்பன் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 37). அதே பகுதியில் கே.சாத்தனூர், கலிங்க நகரை சேர்ந்த இளையராஜா (வயது 32) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் சலூன் கடைக்கு சென்று உள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் இளையராஜா மற்றும் அவருடைய நண்பர் உதயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து ராமகிருஷ்ணரை உருட்டுக் கட்டையால் அடித்துள்ளனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் உதயகுமாரை கைது செய்தனர்.