மகாத்மா காந்தியின் 76வது நினைவுநாள் : திருச்சி சேவை சங்கங்கள் கூட்டமைப்பு மலர்தூவி மரியாதை
திருச்சி, ஜன.30 1948 ஆம் ஆண்டு ஜன.30 இதே நாளில் நாதுராம் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் அஸ்தி மண்டபம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி 76வது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி அஸ்தி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி சேவை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில மகாத்மா காந்தி 76வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுற்றது. வழக்கறிஞர் திலிப், யோகா ஆசிரியர் விஜயகுமார், அய்யாாரப்பன், ராஜ்குமார், வழக்கறிஞர்கள் ஆனந்த், சுரேஷ் உட்பட பல்வேறு சேவை சங்கங்களின் தன்னார்வலர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செய்தனர்.