திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜா நாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை சோதனை செய்தனர் அப்போது அங்கு வந்த ஒரு நபரிடம் சோதனை செய்ததில் ஆசன வாய் வழியாக நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது

இந்நிலையில் அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தின் எடை என்பது 586.500 கிராம் எனவும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு 28.69 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது