50வது வார்டு வேட்பாளர் நஷீமாபாரிக் தேர்தல் பிரச்சாரம்!
திருச்சி மாநகராட்சி 50வது வார்டு வேட்பாளர் நஷீமாபாரிக் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனே சரிசெய்து தருவதுடன் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.