திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் நல்ல மேய்ப்பர் நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் வேலு(வயது 48). இவரது கடைக்கு எட்டரை கீழதெருவை சேர்ந்த இளங்குட்டி (என்கிற) விஸ்வநாதன்(வயது 29) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.700ஐ பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.