வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழத்தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும், குழுமணியில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு மற்றும் வைப்பு அறையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குழுமணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணியினையும்,

பெரியகருப்பூர் ஊராட்சியில் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் மாட்டுக்கொட்டகை அமைத்தல் பணி மற்றும் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டுமானப் பணி, ரூ.11.500 மதிப்பீட்டில் உறிஞ்சுகுழி அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.