ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணி தீவிரம்!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் இணை ஆணை செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.

உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணம் அனைத்து எண்ணி முடித்தபிறகே எவ்வளவு வந்துள்ளது என்பது தெரிய வரும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.