பதவி உயர்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி சரகத்தில் போலீஸ் பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் சுப்பையா தென்காசி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு
போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், திருச்சி மாநகரம் கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீலகண்டன் ஈரோடு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், திருச்சி சி.பி.சி.ஐ.டி. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுபிரிவு இன்ஸ்பெக்டர் மயில்சாமி திருச்சி சரக போலீஸ் பயிற்சி மைய போலீஸ் துணை சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.