நந்தியாறு வடிகாலில் தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நம்ப குறிச்சியில் நந்தியாறு வடிகாலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், நீர்வள துறை செயற்பொறியாளர் நித்தியானந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.