மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று 43-ஆவது வார்டுக்குட்பட்டதெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாக்கடையை தூர்வாரிசீரமைத்த பணிகளையும், காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் கல்வெட்டு பாலம் பணிகளையும், மலையப்ப நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைந்ததை உடனடியாக சீரமைக்கும் பணிகளையும், காவேரி நகர் ஐந்தாம் தெரு, ஆறாம் தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட குண்டும் குழியுமான இடத்தினை உடனடியாக சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டுயும் ஆய்வு செய்தார்.