கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற பண்ணை உரிமையாளர் கைது

0 320
Stalin trichy visit

திருச்சி லால்குடி அருகே பெரியகுருக்கை கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் பண்ணைத் தோட்டம் உள்ளது – கடந்த 20ம் தேதி பண்ணை தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த லால்குடி விடுதலைபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசனுக்கு பல முறை போன் செய்தும் ரிங் ஆகவில்லை என்பதால் அவரது மனைவி சகுந்தாலா சந்தேகம் அடைந்தார்.

இதற்கிடையில் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் அவரது ஆதரவாளர்கள் சிலர் தோட்டத் தொழிலாளி முருகேசனை ரத்த காயங்களுடன் வீட்டு வாசலில் கொண்டுவந்து போட்டுச் சென்றனர் – அடுத்த இரண்டு மணி நேரத்தில் முருகேசனின் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து முருகேசனின் மனைவி சகுந்தலா கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் – புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் விசாரணை திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது – இதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் பன்னை தோட்ட உரிமையாளர் செந்திலை (39) காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் – இதில் முருகேசன் தான் சொன்ன வேலையை சரியாக செய்யாததால் கட்டை மற்றும் அரிவாளால்
அடித்து காயப்படுத்திய செந்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் செய்வதறியாது முருகேசனை தன்னிடம் வேலைக்கு கொண்டு வந்து சேர்த்த தனபாலை அழைத்து அவரது வீட்டிற்கு சென்று முருகேசனை போட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் – பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளியை கண்மூடித்தனமாக தாக்கி உயிர் இழக்க செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.