புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு : பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்
பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் புதிதாக ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றதையொட்டிவழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முத்துமாணிக்கவேலன் தலைமையில் கோர்ட்டு முன்பு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாநில செயலாளர் மாரியப்பன், வக்கீல்கள் முத்துக்குமார், லெனின், விஜய அகிலன், வரதராஜன், ராகவேந்திரன் ராஜ்குமார், மில்லர் ராஜ், ஓபிசி அணி மாவட்ட தலைவர வக்கீல் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.