தி நியூ பாய்ஸ் சார்பாக 23 ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா
சமயபுரம் தி நியூ பாய்ஸ் சார்பாக 23 ஆம் ஆண்டு இரண்டாவது வார சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா மற்றும் அறுசுவை மகா அன்னதானம் இன்று நடைபெற்றது சமயபுரம் முக்கிய வீதிகளில் தெருவலம் வந்து மாரியம்மன் பூ ரதம் புத்தூர் ஆட்டு மந்தை தெரு எஸ்கே கர்ணா குழுவினரின் தப்பு செட்டு, மற்றும் கேரளா செண்டை மேளம் தாளத்துடன். பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன், மண்ணச்சநல்லூர் தேர்தல் பிரிவு தாசில்தார் மூர்த்தி, சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜா, சமயபுரம் அருண் குருக்கள், லால்குடி கார்த்திகேயன், விஜய், விக்னேஷ், சதீஷ்குமார், சிவா, நிர்மல்குமார், பழனிச்சாமி, ஹரி கிருஷ்ணன், ஆகாஷ், உறையூர் மூர்த்தி, எடத்தெரு தனசேகர், கதிர், மற்றும் சமயபுரம் தி நியூ பாய்ஸ் நண்பர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்