சமயபுரம் கோவில் சித்திரை தேர் முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஏப். 12 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்றன 18 ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரைத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்திநாதன், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் காளியப்பன், காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.