வெக்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஏப். 12 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (14.4.2023) நடைபெறவுள்ள தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் சதீஷ்குமார், காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.