ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதந்திர உண்டியல் கணக்கிடும் பணி
திருச்சி, ஆக.25 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 25.08. 2023 வெள்ளிக்கிழமை காலை இணை ஆணையர் செ. மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் .ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது உண்டியல் காணிக்கைகள் கணக்கிடும் பணியில் கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி , கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , சரண்யா , மீனாட்சி ,வெங்கடேசன் , வேல்முருகன் ஆய்வாளர்கள் மங்கையர்ச்செல்வி, பாஸ்கர் , இராமசந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர் , காணிக்கைகள் கணக்கிடும் பணி திருக்கோயில் Srirangam temple Youtube-ல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது .