அரசு பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் படகு பயணம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் அரசுப் பள்ளி மாணவர்களோடு இணைந்து கலைஞர் வழித்தடத்தில் பயணத்தை மேற்கொண்டார். திருவள்ளுவர் சிலை மற்றும் காமராஜர் மணிமண்டபங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எதற்காக தென்குமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைத்தார்? எதற்காக வடக்கு நோக்கி திரும்பி நிற்கும் சிலையை நிர்மாணித்தார்?
ஏனென்றால் ‘இந்திய ஒன்றியத்தின் வரலாறு தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்!’ என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதையும்,
பண்பாடு, கலாசாரங்களின் முன்னோடிகள் தமிழர்கள் எனும் பேருண்மையையும மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி வரலாறுகளை விளக்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி