அன்பில் கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

0 358
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் அன்பில் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.