திருவெறும்பூரில் தடுப்பூசி செலுத்தும் முகாம் – அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை
அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் ஆகியோர் உள்ளனர்.