ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாணவர் – உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்
திருச்சி மணப்பாறை – மருங்காபுரி வட்டம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர் அருண்குமார் தமிழக திருச்சி என்.ஐ.டியும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து நடத்திய JEE தேர்விற்கான பயிற்சியினை பெற்று தற்போது சென்னை ஐஐடிக்கு தேர்வாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அருண்குமாரை நேரில் வரவழைத்து பாராட்டி அவரது கல்விக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 37 ஆயிரம் ரூபாய், மாவட்ட நலப்பணி நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் என மொத்தம் 85 அதற்கான காசோலையை வழங்கி பாரட்டினார்.