சிறந்த கட்டுனர்களுக்கு கரிகாலன் விருது
திருச்சியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சி மையம் சார்பில் கட்டுனர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மைய தலைவர் ஜோதி மாகலிங்கம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகதீசன் விழாக்குழு தலைவர் செந்தில் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறந்த கட்டுனர்கள் 9 பேருக்கு கரிகாலன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பழ கருப்பையா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் மைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.