திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிவர்த்தனைகள் மற்றும் ஆராய்ச்சி, இதர கல்வி பணிகளுக்காகவும், இந்த இரண்டு கல்லூரிகளும் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
இதில் தேசிய கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன், ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராமன் ஆகியோர் கையொப்பமிட்டனர். துறைத் தலைவர்கள் வணிகவியல் தங்கம், கணினி அறிவியல் பிரிவு ஜெயந்தி, கணிதத்துறை நாகராஜன், பேராசிரியர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.