அய்யப்பன் கோவில் அருகே கேட்பாராற்று நின்ற கார் – காவல்துறையினர் விசாரணை
திருச்சி கோர்ட் ரவுண்டானா, அய்யப்பன் கோவில் அருகே கேட்பாராற்று சந்தேகத்திற்குரிய வகையில் ஃபோர்ட் கார் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நின்று கொண்டிருந்தது. காரின் முன்பக்கம் சேதமடைந்திருந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் காவல்துறையினர் அங்கு வந்து கார் எண் மூலம் உரிமையாளரை கண்டறிந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை அழைத்துள்ளனர்.
