லால்குடியில் நடைபெற்ற அதிமுக 51வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்
அதிமுக பொன் விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷிஸ்வரர் சிவன்கோவில் அருகில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் உரையாற்றினார். இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.