பயிற்சி மாணவர் மாயம்…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சிலுவை (வயது 23), இவர் பாரதியார் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாதிரியாருக்கு பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் பகுதிக்கு படிப்பதற்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து சவரிமுத்து கொடுத்த புகாரி அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.