திருச்சி கருமண்டபம் செக்போஸ்ட் அருகே சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று அங்கிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.