பெரிய சூரியூரில் வீணாகும் காவிரி குடிநீர்
திருச்சி மாவட்டம், பெரிய சூரியூர் ஊராட்சியில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் வீணாகி வருகின்றது. தற்போது கடுமையான கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில். குடிநீர் வீணாகி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.