வளநாடு அருகே வாகனம் மோதி விவசாயி பலி
மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வெள்ளைக்கோன் பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாய இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு கைகாட்டி பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
இது குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.