நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த 2006ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கியில் ரூ.12 லட்சம் ட்ராக்டருக்கு கடன் வாங்கிய நிலையில் அதற்கான தொகையை முழுமையாக செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் வங்கி நிர்வாகம் பன்னீர் செல்வத்தின் 11½ ஏக்கர் நிலத்தை 58 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டது. மேலும் வங்கி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வங்கி உத்தரவின் பேரில் வங்கி ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்,
வருவாய்துறை, போலீசார், நில அளவைத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நிலத்தை அளக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான அதிகாரிகள் தங்களுக்கு கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டுகொள்கிறோம் என்று கூறியும், அளக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 8 பேருக்கு சொந்தமான மொத்த இடத்தையும் எப்படி எடுக்க முடியும் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.