மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொன்சிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா துவங்கியது. சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்சிங்கம்பட்டி ஆகிய மூன்று ஊர் நாட்டாண்மைகள் குளத்தின் கரையில் இருந்து வெள்ளைவீச்சு என்று கூறப்படும் வெள்ளைநிறத்துண்டை சுழற்றியதை அடுத்து மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக நின்றிருந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர். இதில் சுறுறுப்புற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மீன் பிடித்து வருகின்றனர்.