தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிசு
திருச்சி மாவட்டம் பொன்னம்படடி பேரூராட்சியில் பூதநாயகி அம்மன் கோவில் திருமண மண்டபம் மற்றும் சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கொரானா தடுப்பூசி சிறப்பு மெகா முகாம் நடைபெற்றது.
முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு கிரைண்டர்- 1 நபருக்கு, இரண்டம் பரிசு மிக்ஸி- 1 நபருக்கு, மூன்றாம் பரிசு குக்கர் – 3 நபருக்கு, நான்காம் பரிசு வேஷ்டி 20 நபர்களுக்கு, ஐந்தாம் பரிசு சேலை 20 நபர்களுக்கு குழுக்கள் முறையில் வழங்கப்பட்டது.